1. இஸ்மத் சன்னியாசி என்று அழைக்கப்படுபவர் - வீரமாமுனிவர்.
2. இஸ்மத் சன்னியாசி என்பது எந்த மொழிச்சொல்- பாரசீகம்.
3. இஸ்மத் சன்னியாசி என்ற சொல்லின் பொருள் - தூய துறவி.
4. இயேசுநாதரின் வளர்ப்புத் தந்தை - சூசையப்பர்.
5. தமிழ் மொழியில் வெளிவந்த முதல் அகராதி - சதுரகராதி.
6. தேம்பாவணி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் - சூசையப்பர்.
7. கருணையனின் தாயின் பெயர் - எலிசபெத்.
8. சந்தாசாகிப் எந்த பகுதியை ஆட்சி செய்தார் - திருச்சி.
9. தேம்பா + அணி என்ற சொல்லின் பொருள் - வாடாத மாலை.
10. தேன் + பா + அணி என்ற சொல்லின் பொருள் - இனிய பாடல்களின் தொகுப்பு.
11. சூசையப்பரின் வேறு பெயர் - யோசேப்பு & வளன்.
12. தேம்பாவணி என்ற நூல் எத்தனை காண்டங்களைக் கொண்டுள்ளது - 3 காண்டங்கள்.
13. தேம்பாவணி என்ற நூல் எத்தனை படலங்களைக் கொண்டுள்ளது - 36 படலங்கள்.
14. தேம்பாவணி என்ற நூல் எத்தனை பாடல்களைக் கொண்டுள்ளது. - 3615.
15. தேம்பாவணி என்ற நூல் எந்த நூற்றாண்டில் படைக்கப்பட்டது - 17 ஆம் நூற்றாண்டு.
16. தேம்பாவணி என்ற காப்பியத்தை இயற்றியவர் யார்? - வீரமாமுனிவர்.
17. வீரமாமுனிவரின் இயற்பெயர் - கான்சுடான்சு ஜோசப் பெஸ்கி.
18. சதுரகராதி என்ற நூலை எழுதியவர் யார் - வீரமாமுனிவர்.
19. தொன்னூல் விளக்கம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார் - வீரமாமுனிவர்.
20. வீரமாமுனிவர் திருக்குறளை எந்த மொழியில் மொழிபெயர்த்தார் - லத்தீன்.
21. யாரை சந்தித்து உரையாடுவதற்காக வீரமாமுனிவர் உருது மொழியை கற்றுக்கொண்டார். - சந்தாசாகிப்.
22. வீரமாமுனிவர் எத்தனை மாதங்களில் உருது மொழியை கற்றுக்கொண்டார். - 2 மாதங்கள்.
23. இஸ்மத் சன்னியாசி என்ற பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கியவர் யார்? - சந்தாசாகிப்.
24. கிறிஸ்துவுக்கு முன் தோன்றியவர்? - திருமுழுக்கு யோவான்.
25. அருளப்பன் என்று அழைக்கப்படுபவர் யார்? - திருமுழுக்கு யோவான்.
26. கிறிஸ்துவின் வருகையை அறிந்த முன்னோடி யார்? - திருமுழுக்கு யோவான்.
27. தேம்பாவணி என்ற நூலில் வீரமாமுனிவரால் கருணையன் என்று அழைக்கப்படுபவர் யார்? - திருமுழுக்கு யோவான்.
28. சேக்கை என்ற சொல்லின் பொருள் - படுக்கை.
29. யாக்கை என்ற சொல்லின் பொருள் - உடல்.
30. இளங்கூழ் என்ற சொல்லின் பொருள் - இளம் பயிர்.
31. புழை என்ற சொல்லின் பொருள் - துளை.
32. தேம்ப என்ற சொல்லின் பொருள் - வாட.
33. அசும்பு என்ற சொல்லின் பொருள் - நிலம்.
34. உய்முறை என்ற சொல்லின் பொருள் - வாழும் வழி.
35. ஓர்ந்து என்ற சொல்லின் பொருள் - நினைத்து.
36. கடிந்து என்ற சொல்லின் பொருள் - விலகி.
37. உவமணி என்ற சொல்லின் பொருள் - மணமலர்.
38. படலை என்ற சொல்லின் பொருள் - மாலை.
39. துணர் என்ற சொல்லின் பொருள் - மலர்கள்.
40. காய்மணி - இலக்கண குறிப்பு காண்க - வினைத்தொகை.
No comments:
Post a Comment